Friday, November 17, 2006

காதல் வச்சேன் உம்மேல





ரவுசு பண்ணி
ராங்கு காட்டும்
ரங்கம்மா
எம்மனசு துடிக்கிறது
உனக்கு தெரியுமா..

கலர் கலரா
புடவ கட்டுறது
என்னம்மா
நீ வெச்ச பொட்டுல நான்
மனச வுட்டேன் தெரியுமா

மீச வச்ச நாளு முதலா
உம்மேல
ஆச வச்சேன் தெரியுமா

காதல் வச்சேன் உம்மேல
கந்து வட்டி
கட்டாதவனாட்டம்
கவுந்து கிடக்கறன் அதனால..

ஒஞ்சிரிப்புக்காக
உருகுறன்
ஒத்த தபா தான் சிரிச்சா
குறைஞ்சா நீ பூடுவ..

ஒம்பேர சொல்லி
அடிக்குது என் ஆர்ட்டு பீட்டு
நீயும் வந்துடு நம்ம ரூட்டு

ரவுசு பண்ணி
ராங்கு காட்டும்
ரங்கம்மா
எம்மனசு துடிக்கிறது
உனக்கு தெரியுமா..

6 comments:

by Cineguru said...

இன்னா மாமு,
அல்லாதையும் ரீட் பன்னசொல்ல
ரொம்ப பேஜாரா கீதுபா!
வால்க தமில் புலமை....

Anonymous said...

uttalagadi kavaidee maa.

இம்சை அரசி said...

உங்களுக்கு மட்டும் எங்க இருந்துதான் இப்படி blade pics கிடைக்குதோ!!!!

Anonymous said...

ஆஹா...ஆஹா இருந்தாலும் உங்ககிட்ட கவிதை நான் எதிர்பார்க்கவேயில்லை...

ரூபஸ் said...

சூப்பராகீது ப்பா...

Blade Pakkiri said...

சூப்பரா கீது மாமு.இவ்ளோ நாலா தெரியாம போச்சே, இந்த மாதிரி எல்லாம் சைட்டு கீதுனு... - பிளேடு பக்கிரி